Monday 4 June 2012

யார் பைத்தியம்....????????

இதோ அவன்தான் பைத்தியம் !!!
சாலையின் நடுவே போகிறான் பார்
அவன்தான் என்றான் ஒருவன் ...
எதிர்வரும் வாகனம் கண்டும்
நிற்காமல் நடை போடுகிறானே
அவன்தான் என்றான் இன்னொருவன் ..
யார் பைத்தியம் ???

முற்றும் துறந்த முனிவனை போல்
உள்ளானே அவனா பைத்தியம் ???
எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே
அவனா பைத்தியம் ???
சொந்தங்களையும் சோகங்களையும்
கடந்து போகிறானே
அவனா பைத்தியம் ???
மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே
அவனா பைத்தியம் ???

தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன்
முதலாளி !!!
போலி வேடமிட்டு மக்களிடம்
பணம் பறிப்பவன் சாமியார் !!!
மக்களின் தேவையை புறந்தள்ளி
பதவியில் இருப்பவன்
அரசியல்வாதி !!!

சுயநலம் கொண்ட தீயோரை
ஆட்சியில் அமர்த்துவோர் வாக்காளர் !!!
அரசியல் சாக்கடை என்றே
புறந்தள்ளுவோர் இளைஞர் !!!

இவர்கள் எல்லாம் பைத்தியமில்லையா ???
வாழ்க்கையின் எண்ணங்களுக்கு
விடை கொடுத்தவன் தான் பைத்தியமா ???
முடிகின்ற வாழ்வில் முடிவில்லா ஒன்றை
தேடி போகிறான்
என்னவென்று தெரியாமலே !!!
இவன் போன்றோர் இந்த பூமியிலே
எத்தனை பேர் ???
சக மனிதனை நேசிப்போம்...

இவன் கடவுளின் குழந்தை
இவன் வாழ்க்கை
வாழ்வியல் நெறிகளுக்கு
அப்பாற்பட்டது ...

(தனி மனிதனிடம் அன்பு காட்டுவோம் ... கொடுக்க என்றுமே குறையாத அன்பினை எல்லாருக்கும் கொடுப்போம் ...இது போன்ற மனிதர்களின் நிலைக்கு இந்த சமுதாய அமைப்பும் நாமுமே காரணம்
அவர்களை போன்றோர் உருவாகாமல் தடுப்போம் ...புதியதோர் உலகம் செய்வோம் )

1 comment:

  1. மாஷா அல்லா!
    நல்ல பகிர்வு!
    மிக்க நன்றி!

    ReplyDelete