Thursday 19 July 2012

என்ன பதில்? ??


மனிதா!!
வாழப்பிறந்தவனா நீ?
கேள் உன் சிந்தனையிடம்.
என்ன பதில்?

காதல் கொண்டு மிதக்கிறாயா வானில்?
தேவையில்லை உன் கால்கள்
வெட்டி விடு அவற்றை-காதல்
உன்னை கைவிடும் வரை.

கோபம் கொண்டு கொதிக்கிறாயா?
சிந்தித்தாயா ஒன்றை
வானமும் பூமியும் நம்முடன் கோபம் கொண்டால்......
கண்கள் காட்டுகிறதா உன் கல்லரையை

பெருமை கொண்டு தலைக்கணமா உனக்கு?
மறந்து விட்டாயா வயிற்றில் நீ சுமக்கும்
மலத்தையும் சலத்தையும்
குனிந்து கொள் தலையை 2 கேவலம்
உன்னுல்லும் இருக்கிறது.

கொடுப்பதில்லையா நீ எவருக்கும்?
மடிந்து பார்
உன் செல்வங்கள் செலவழிக்கப்படும்
தோரனைகளை
பிறந்த மேனியாவே பிரிவாய்
எதற்கும் உபயோகம் இல்லாமல்.

பொறாமை உன் நெஞ்சை பிழிகிறதா?
திரும்பிப்பார் நீ வந்த வழிகளை
தெரிகிறதா உன் வாழ்வின் சுவடுகள்-தெரியாது
எரித்து விட்டது உன் பொறாமை அவைகளை

இப்போது சொல் என்ன பதில்?